Saturday, April 21, 2007

பல்லேலக்கா - சிவாஜி பாடல்

சமீபத்தில் வெளிவந்த பாடல்களில் மிகவும் பிடித்த பாட்டை சட்டென சொல்லு என்று யாராவது கேட்டால் சட்டென நினைவுக்கு வருவது ரஹ்மானின் இசையில் எஸ்.பி.பி. பாடி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் பல்லேலக்கா என்ற ரஜினி பாடல் தான். சடுகுடு சடுகுடு என்று விளையாடிய குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தியது.

அப்பா...என்ன வேகம் இந்தப் பாடலில்...சூரியனோ சந்திரனோ என்று கோரஸில் ஆரம்பிக்கும் பாடல், யே..பல்லேலக்கா பல்லேலக்கா என்று எஸ்.பி.பி. தடதட அதிவேக ரயில் குரலில் ஆரம்பித்தவுடன் எகிறுகிறது. அதுவும் மெய் மெய் மெய் என்று (எத்தனை மெய்...யப்பா) சொல்லும் போது எங்கேயோ இழுத்து செல்லுகிறது.

பாடலின் வரிகள் எல்லாம் மலரும் நினைவுகள் தான்...




சடுகுடு..சடுகுடு..ஆடிய மரத்தடி
படுபடு படுபடு படுவென போத்திய புல்வெளி
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி
சுட சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி
தட தட தட வென அதிர்கிற ரயிலடி
கட கட கடவென கடக்கிற காவிரி
விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை
முறு முறு முறுவென முறுக்கிய மீசை





அப்படியே நம்ம ஊருக்கு இழுத்துச் சென்று ரயிலடியிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும், ஆத்தோரத்திலும், மீசையை தடவிக் கொண்டு சென்ற இள வயசை நினைவுபடுத்துகிறது. என்ன, நம்ம ஊரில் காவேரி ஆறுக்குப் பதிலாக வைகைக் கரையில் அலைந்தோம்.




என் மகள் இந்தப் பாடலை பாட முயற்சி செய்கின்றாள். அத்தனை வரிகளையும் மனப்பாடம் செய்து பாடுவதாக உத்தேசம்.


பாடலில் மிகவும் பிடித்தவைகள்...
தாவணி பெண்களும் தூதுவிடும் கண்களும் கொடுக்கும் கலகல சிரிப்பு
திருத்தணிக்கா பாலுவின் அடித்தொண்டையில் இருந்து வரும் ரிப்பீட் குரல்
மெய் மெய் மெய் என பல முறை சொன்னாலும் ஒரு முறை மட்டும் மெய்ய்ய்ய் என இழுத்து பாடும் போது (பாடலின் முடிவில்)
தட தடவென வரும் இசை
சரணங்களில் உள்ள மெலடி (ராஜாவின் சாயல்???)
செல்போனை அணைத்து சில்வண்டின் ரீங்காரம் கேட்போம், வெறும் கால்களில் நடந்து மண்ணோடு பேசிக் கொண்டு செல்வோம் என்பது போன்ற தரமான வரிகள்
எஸ்.பி.பி.யின் தெளிவான உச்சரிப்பு
மஹிந்தியின் பஞ்சாபி பாடலை நினைவு படுத்தினாலும் பல்லேலக்கா பல்லேலக்கா என்ற வரிகள்

அட, சீக்கிரமா படத்த ரிலீஸ் பண்ணுங்கப்பா, ரெண்டு வருசமா ஒரே படத்த எடுத்துக் கிட்டு....

பாடலின் முழு வரிகள்: ( நன்றி: கோவை ரவீ, எஸ்.பி.பி. ரசிகர்கள் குழு)

சூரியனோ சந்திரனோ
யார் இவனோ
சட்டென்ன சொல்லு
சேர பாண்டிய சோழன் இவனோ
சொல்லு சொல்லு
சட்டென்ன சொல்லு

சூரியனோ சந்திரனோ யார் இவனோ
சட்டென்ன சொல்லு
சேர பாண்டிய சோழன் இவனோ
சொல்லு சொல்லு
சட்டென்ன சொல்லு

பாரடி பாரடி பாரடி
இவனோ பாய்கிற சிறுத்தையின் காலடி
இவனோ கூறடி கூறடி யாரடி
இவனோ கேட்டதை பட்டென்ன சுட்டிடும் இவனோ

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
சேலத்துக்கா மதுரைக்கா
மதராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
திருத்தணிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா


காவேரி ஆறும் கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா
ஓ தாவணி பெண்களூம் தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா
ஹ ஹ ஹ நம்ம களத்து மேடு
கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளி தெளிக்கும் ரோடு

ஹே
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..

ஆடிய மரத்தடி
படுபடு படுபடு படுவென போத்திய புல்வெளி
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி
சுட சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி
தட தட தட வென அதிர்கிற ரயிலடி
கட கட கடவென கடக்கிற காவிரி
விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை
முறு முறு முறுவென முறுக்கிய மீசை

மனதில் இருக்குது
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்

சூரியனோ சந்திரனோ யார் இவனோ
சட்டென்ன சொல்லு
சேர சோழ பாண்டியன் இவனோ
சொல்லு சொல்லு சட்டென்ன சொல்லு

சூரியனோ சந்திரனோ யார் இவனோ சட்டென்ன சொல்லு
சேர சோழ பாண்டியன் இவனோ
சொல்லு சொல்லு சட்டென்ன சொல்லு

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
சேலத்துக்கா மதுரைக்கா மதராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா
சட்டென்ன சொல்லு சட்டென்ன சொல்லு

யே லே லேகிராமத்துக் குடிசையிலே
கொஞ்சம் காலம் தங்கிப்பாருலே
கூரை ஒட்டை விரிசல் வழி
நட்சத்திரம் எண்ணிப்பாருலே

கூவும் செல்போனின் நச்சரிப்பை அணைத்து
கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்

ஆலமரத்துக்கு ஜடை பிண்ணித்தான்
பூக்கள் வைக்கலாமே
ஊர் ஓரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்
பென்சில் சீவலாமே

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
சேலத்துக்கா மதுரைக்கா
மதராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா

ஒ காவேரி ஆறும் கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா
ஓஒ தாவணி பெண்களூம் தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா
த தரா தராசட்டென்ன சொல்லு

யே லேலே..
அஞ்சரை பெட்டியிலே
ஆத்தாவோட ருசி இருக்கும்

ஸ்ஸ்ஸ்ஸ்....
அம்மியில் அரைச்ச்சு வெச்ச
நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்

யேலேலே
ஆடு மாடு மேலே உள்ள பாசம்
வீட்டு ரேசன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்

வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணெங்கும் வீசும்
பாம்பட கிழவியின் பச்சிலை மருந்துக்கு பயம் ஓடிப்போகும்

பங்காளி
பக்கத்து வீட்டுக்கும் சேத்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்
ஹே..

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
சேலத்துக்கா மதுரைக்கா
மதராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா

காவேரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா
மறந்து போகுமா
ஓ தாவணி பெண்களூம் தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா

ஹ ஹ ஹ
நம்ம களத்து மேடு
கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளி தெளிக்கும் ரோடு

ஹே
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..

சடுகுடு..சடுகுடு..
ஆடிய மரத்தடி
படுபடு படுபடு
படுவென போத்திய
புல்வெளி

தொட தொட
தொட தொட
உடைகிற பனித்துளி

சுட சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி
தட தட தட வென அதிர்கிற ரயிலடி
கட கட கடவென கடக்கிற காவிரி
விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை
முறு முறு முறுவென முறுக்கிய மீசை

மனதில் இருக்குது
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
சேலத்துக்கா மதுரைக்கா
மதராசுக்கா திருச்சிக்கா
திருத்தணிக்கா
திருத்தணிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
சேலத்துக்கா மதுரைக்கா
மதராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா

கூல்