Monday, June 8, 2009

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி

இந்தப் பாடலை தற்செயலாக கேட்க நேர்ந்தது. பாடலின் முதலில் ஸ்வர்ணலதா பாடும் போது அந்தக் காந்தக் குரலை ரசித்துக் கொண்டிருக்கும் போதே இடையில் பாலு சார் நுழைந்து எங்கேயோ இழுத்துக் கொண்டு சென்று விடுவார். பாலு சார் மற்றும் ஸ்வர்ணலதா இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள் எல்லாமே அற்புதமான பாடல்கள். இந்த இருவரின் இணைந்த பாடல்களுக்காகவே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

பாலு சாரின் அள்ளிக் கொண்ட என்று நுழையும் போதே தெரிந்து விடும், ஆள் நம்மை எங்கேயோ தள்ளிக் கொண்டு செல்லப் போகிறார் என்று. எல்லோருக்கும் ஆச்சரியமானதும் அதிசயமானதும், எப்படி அவர் சிரித்துக் கொண்டே அதுவும் ரொம்ப சுலபமாக பாடுகிறார் என்பது தான், இந்தப் பாடலில் அந்த மாதிரி சில இடங்களில் கலக்கி இருப்பார். கடவுள் கொடுத்த மிகப் பெரிய வரம் அவருக்கு, குரல் வளம். நீண்ட ஆயுளைக் கொடுத்து ராஜா சாருடன் இணைந்து தமிழில் பாட அமைய வேண்டும்.



இதோ பாடலின் வரிகள் ...

ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓ...பைங்கிளி...நிதமும்

(என்னைத் தொட்டு)

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆழ வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு...
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு...
அன்பே ஓடி வா...
அன்பால் கூட வா...
அன்பே ஓடி வா...அன்பால் கூட வா ...
ஓ...பைங்கிளி...நிதமும்
என்னைத் தொட்டு...
நெஞ்சைத் தொட்டு...
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..

ஆஆஆ....ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆஆஆ
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே...
மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே...
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே...
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே...
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே...
என்னில் நீயடி...
உன்னில் நானடி...
என்னில் நீயடி...உன்னில் நானடி...
ஓ பைங்கிளி... நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி...
அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓ...பைங்கிளி...நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..

1 comment:

Unknown said...

intha paattai iravu 1000 manikku mel walkman l ketkavum. Appa than sorgam ethu entru puriyum.
RAJA SIR N INTHA MATHIRI MELODY PAADALKALIN "ADIMAI" NAAN